• Apr 27 2024

“எல்லாரையும் நம்பாதே..ஆனா நடி...” ஆயிஷாவை Motivate செய்த ஜனனி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி  வருகிறது. ஒவ்வொரு வாரமும் முழுக்க முழுக்க பல திருப்புமுனைகளுடன் தான் இந்த நிகழ்ச்சி நகர்ந்து கொண்டு இருக்கிறது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் எனக் கூறி ஜி.பி.முத்து வெளியேற குறைந்த வாக்குகளை பெற்று  சாந்தி, அசல் கோலார் மற்றும் ஷெரினா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் முறையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த எபிசோடில் தோன்றி இருந்த கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்குள் விதிமுறைகளை சரிவர பின்பற்றாதது குறித்து ஆவேசமாக நிறைய கருத்துக்களை கூறி இருந்தார். இவ்வாறுஇருக்கையில் , ஆயிஷா தற்போது பிக்பாஸ் வீட்டில் சற்று குழப்பத்துடன் இருப்பதாக தெரியும் நிலையில், ஜனனி அவருக்கு அறிவுரை கொடுத்தது தொடர்பான விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது.



கடந்த வார சண்டைகளுக்கு பின்னர் சற்று மனம் சோர்ந்த நிலையில், தான் இருப்பதாக ஆயிஷா தெரிவித்துஇருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்திய எபிசோடில் கூட பத்திரிக்கையாளர் போல சக போட்டியாளர் கேள்வி கேட்ட சமயத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆயிஷா தெரிவித்திருந்தார்.

அதே போல, எலிமினேஷன் நடப்பதற்கு முன்பு கூட, யார் வீட்டில் இருந்து போக வேண்டும் என கமல்ஹாசன் கேட்க, நான் தான் போக வேண்டும் என்றும் ஆயிஷா கூறி இருந்தார். அதன்பின்னர், பிக்பாஸ் வீட்டில் தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவரான ஷெரினா வெளியேறவே இதன் காரணமாக உடைந்து அழவும் செய்திருந்தார் ஆயிஷா.



அத்தோடு  வழக்கம் போல இல்லாமல், சற்று மன சோர்வுடன் ஆயிஷா பிக்பாஸ் வீட்டிற்குள் இயங்கி வருகின்றார்.மேலும்  அப்படி ஒரு சூழலில், அவருக்கு அறிவுரை வழங்குகிறார் ஜனனி. "உன்னை கண்டு பயப்படும் அளவுக்கு வர வை. அசீம் அளவுக்கு இல்லை, உன்னுடைய அளவுக்கு. கெத்தா வா. மற்றவர்களை விட எனக்கு எல்லாம் தெரியும் என்று யோசி. எந்த இடத்திலும் உன்னை தாழ்த்தாதே. கோபம் வந்தால் காட்டு, இந்த மாதிரி உடைந்து விடாதே. இப்படி நீ இருப்பதற்காக உன்னை மக்கள் காப்பாற்றவில்லை. நீ மாறனும் என்பதற்காக தான் உன்னை Save செய்து வைத்திருக்கிறார்கள். உடைந்திருக்கிற நீ இன்னும் ஸ்ட்ராங்காக வரவேண்டுமென்று தான் அவர்கள் அப்படி செய்தார்கள்.



வெளியில் நம்மை பற்றி என்ன பேசுவார்கள் என்று யோசிப்பது பயமாக இருக்கும். மேலும் இங்கு நடப்பது பற்றியும் மனதில் என்னென்னவோ தோன்றும். எல்லா இடத்திலும் ஸ்ட்ரைட்டா இருப்போம், என்ன ஆனாலும் ஓகே என்று இருந்து பார். அப்படி இருக்கையில் ஒரு விஷயமாவது நமக்கு பாசிட்டிவ் ஆக வராதா. எல்லாரையும் நம்பாதே, ஆனா நடி. யாராச்சும் ஏதாவது சொன்னா ஓகே ஓகே அப்படின்னு சொல்லிட்டு போ" என அசத்தலான அறிவுரையை ஆயிஷாவுக்கு வழங்கி உள்ளார் ஜனனி.

இதனால், நிச்சயம் ஆயிஷாவிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தனக்கே உரித்தான பாணியில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆயிஷா இயங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement