இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி, இவர் தற்பொழுது ஐ.பி. எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் தோனி கிரிக்கெட் ஓய்வுக்கு பின் திரைப்பட தயாரிப்பில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் முதல் படத் தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் “சஞ்சய் என்ற எந்த நபரையும் நாங்கள் பணிக்கமர்த்தவில்லை.
போலியான செய்திகளால் யாரும் ஏமாற வேண்டாம். நாங்கள் இப்போது பல விதமான படங்களுக்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.
Listen News!