• Apr 27 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முறியடிக்க திட்டம் தீட்டும் இயக்குநர் ஷங்கர் மற்றும் சிறுத்தை சிவா- ரூ. 1000 கோடி பட்ஜெட் பிளானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் மணிரத்னம். இவருடைய இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படமானது செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக அனைத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி ,ஜெயராம் ,ஐஸ்வர்யா ராய் ,த்ரிஷா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.  சரித்திர கதையை மையமாக கொண்டு உருவாகி இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா என்பன பிரமாண்டமாக நடைபெற்றது.


இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு நிகராக இன்னும் சில படங்கள் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி  சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிதாக சரித்திர படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளிவந்தது.

இந்நிலையில், இந்த சரித்திர படங்களை தொடர்ந்து அடுத்ததாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி சரித்திர கதையை படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கான முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வேள்பாரி புத்தகத்தை குறித்து பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியுள்ளதாகவும் பொன்னியின் செல்வனை போல் வேள்பாரி கதையும் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து கதை என்று கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement