நடிகர் தனுஷ், சிறந்த நடிகராக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளவர். எனினும் சமீபத்தில் இவரது நடிப்பில் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் வெளியாகி தனுஷின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. முன்னதாக கோலிவுட்டில் ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்களும், பாலிவுட்டில் அட்ராங்கி ரே படமும் வெளியானது.
இதையடுத்து தனுஷின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.எனினும் இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நானே வருவேன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் பிரபு மற்றும் கதிர் என்ற கேரக்டர்களில் தனுஷ் நடித்திருந்தார். இதில் கதிர் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார்.
இதனிடையே கதிர் போன்ற கேரக்டர்களில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டுமென்றும் விரைவில் ப பாண்டி போன்று மீண்டும் படத்தை இயக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனினும் இதையொட்டி நடிகர் தனுஷ் இயக்கத்தில் சூட்டிங் துவங்கப்பட்டு பாதியில் நின்றுபோன நான் ருத்ரன் படத்தின் சூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நாகர்ஜுனா, அதிதீ ராவ் ஹைதாரி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் கமிட்டாகி இருந்தனர்.இப் படத்தின் சூட்டிங் ஆரம்பிக்ப்பட்டது முதல் பாதியின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.
இப் படத்தின் 35 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தப் படத்தின் சூட்டிங்கை துவக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நான் ருத்ரன் படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!