• May 18 2024

ஜனனி, விக்ரமன் பெயரில் வெடித்த சர்ச்சை..பிக்பாஸ் வீட்டில் குறும்படம் போடப்படுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி உள்ளது என்று தான் கூற வேண்டும்.சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். இதனை அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.

அதே போல, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கூட போட்டியாளர்கள் இடையே நடைபெற்று வருவதும் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெறும்.மேலும்  இப்படி ஏகப்பட்ட பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் இருக்கிறது.

முன்னதாக, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறி இருந்தனர். எனினும் இதற்கடுத்து மற்ற போட்டியாளர்கள் புதிய டாஸ்க்கில் தங்களின் திறனை வெளிப்படுத்திக் கொண்டும் உள்ளனர்.அத்தோடு கடந்த வாரம் சினிமா கதாபாத்திரங்களாக போட்டியாளர்கள் மாறி இருந்த நிலையில், சண்டைகள் குறைவாகவும் அதே வேளையில் சுவாரஸ்யம் மற்றும் வேடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் அதிகமாகவும் இருந்தது. ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறாக இந்த வார டாஸ்க் அமைந்திருந்தது. ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் சண்டை உருவாகி இருந்த நிலையில், சற்று பரபரப்பும் நிலவி இருந்தது.

இவ்வாறுஇருக்கையில்  விக்ரமன் மற்றும் ஜனனி ஆகியோரின் செயல்பாடு குறித்து பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம், பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள்  சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் டாஸ்க் நடந்திருந்தது. அதாவது போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு டாஸ்க் நடைபெற்று வந்தது. இதில் நரகவாசிகளாக இருக்கும் விக்ரமன் மற்றும் ஜனனி ஆகியோர் சொர்கத்துக்குள் வர வேண்டும் என தெரிகிறது. அப்போது அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் சொர்க்கத்தில் வர முயல, அவர்கள் இருவரையும் தடுக்கிறார் தனலட்சுமி.


எனினும் அந்த சமயத்தில், தனலட்சுமியை தாண்டி விக்ரமன் மற்றும் ஜனனி ஆகியோர் வெளியே வர, முதலில் கோட்டில் விக்ரமன் கைவைத்தது போல தெரிகிறது. இதற்கு அடுத்தபடியாக, ஜனனி கைவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, தான் முதலில் கைவைத்ததாக விக்ரமன் கூற, ஆனால் ஜனனி தான் முதலில் கோட்டில் கைவைத்தார் என தனலட்சுமி சொல்கிறார்.


இதன் பின்னர், அசீம் கூட ஜனனி முதலில் லைனில் கைவைத்ததை தான் பார்த்தாக கூற, நீங்கள் இருந்த இடத்தில் இருந்து உங்களுக்கு எப்படி தெரியும் என்றும் விக்ரமன் பதில் கேள்விகளை முன் வைக்கிறார். அத்தோடு  ஒரு சில போட்டியாளர்கள் கூட ஜனனி தான் கைவைத்தார் என கூற, விக்ரமன் தொடர்ந்து முதல் ஆளாக நான் தான் வந்தேன் என்றும் கூறுகிறார். தான் வந்தது தெரிந்த போதிலும் கடைசியாக கேமரா முன் பேசும் விக்ரமன், "ஜனனி சொர்க்கத்துல இருக்காங்க, நான் நரகத்துக்கே போறேன்" என கூறுகிறார்.


மேலும் இது பெரிய அளவில் சர்ச்சையை உண்டு பண்ண இது தொடர்பான வீடியோவை பகிரும் பார்வையாளர்கள், விக்ரமன் தான் முதலில் தொட்டார் என்றும் வீடியோவின் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர். இந்த வார இறுதியில், கமல்ஹாசன் குறும்படம் போட்டு உண்மையை எடுத்துரைப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement