• May 18 2024

தனது மகன் உமாபதியின் திருமணம் குறித்து ஓபனாகப் பேசிய தம்பி ராமையா?- இப்படியொரு பிரச்சினையில் இருக்கின்றனரா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திரத் தம்பதிகளாக விளங்கும் பல பிரபலங்கள் இருக்கின்றனர். அவ்வாறு புதிதாக திருமண பந்தத்தில் இணையவுள்ள பிரபலங்கள் தான் தம்பி ராமையாவின் மகன் உமாபதி மற்றும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. இருவரும் ஒன்றாக இணைந்து இதுவரை படங்களில் நடித்தது கூட இல்லை.

இப்படியான நிலையில் இவர்கள் இருவரும் எப்படி காதல் வயப்பட்டனர் என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்தனர்.ஷு தொலைக்காட்சியில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வைவல் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தினார்கள்.இதில் உமாபதியும் பங்கு கொண்டிருந்தார்.தனது தந்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பதால் சர்வைவல் சூட்டிங் பார்ப்பதற்கு ஐஸ்வர்யா அடிக்கடி செட்டுக்கு வருவாராம். அப்பொழுதுதான் உமாபதியின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது. 


அப்படி சாதாரண நட்பாக ஆரம்பித்த அவர்களது அறிமுகம் இப்பொழுது காதலில் வந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.சமீபத்தில் தனது சொந்த செலவில் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவிலை கட்டிய நடிகர் அர்ஜுன் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் தம்பி ராமையாவை குடும்பத்தோடு அழைத்து இருந்தாராம்.அந்த நிகழ்ச்சியில் வைத்து இரு குடும்பத்தினரும் இவர்களது காதல் குறித்து பேசி திருமண தேதியையும் குறித்து விட்டதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பேட்டி ஒன்றில் தம்பி ராமையா பேசியிருக்கிறார். அதில் அர்ஜுன் சார் ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த திரைப்படத்தை நடித்து முடித்ததும் திருமணம் நடக்கும் என்னதான் இருந்தாலும் நான் ஒரு குணசித்திர நடிகர் ஆனால் அர்ஜுன் சார் ஹீரோ. இதை நான் தாழ்வு மனப்பான்மையில் சொல்லவில்லை ஆனால் அவருடைய சௌகரியத்தையும் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பெண் வீட்டாரின் சம்மதமும் அவர்களுடைய சவுகரியமும் நமக்கு ரொம்பவே முக்கியம். கல்யாணம் என்றால் இரண்டு வீட்டினரின் முடிவுகள் சுகமாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யா எங்களுக்கு இன்னொரு மகள் போல தான் இருக்கிறார். என்னுடைய மகன் உமாபதி ஐஸ்வர்யாவை காதலிப்பதை பற்றி என்னிடம் நேரடியாகவே சொல்லி விட்டான்.

 பொதுவாக குழந்தைகள் என்பது நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆனால் நமக்காக உருவாக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்களுடைய சந்தோசம் தான் நமக்கு முக்கியம். அதனால் நாங்களும் அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டோம். அர்ஜுன் சார் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இனி அர்ஜுன் சார் திரைப்படம் முடிவடைந்ததும் திருமணம் நடைபெறும் என்று பேசியிருக்கிறார்.












Advertisement

Advertisement