• May 18 2024

ரஜினியுடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் அரவிந்த்சாமி- அதுவும் என்ன படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வலுபவர் தான் ரஜினிகாந்த். இவர் இதுவரைக்கு 160 படங்களுக்கு மேல் நடித்திருப்பதோடு இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகின்றார்.இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் 170 ஆவது படத்தை டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக சில தகவல்கள் கோடம்பாக்கத்தில் பரவி வருகின்றன.


அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இப்போது அந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஏற்கனவே அரவிந்த் சாமி தன்னுடைய அறிமுகப் படமான தளபதி படத்திலேயே ரஜினியோடு நடித்துள்ளார். இந்த தகவல் உண்மையாக இருப்பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement