• May 18 2024

மீண்டும் நடிக்க வரும் நடிகை ஆல்யா மானசா- அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் தனது நடிப்பின் மூலம் கலக்கி வருபவர் நடிகை ஆல்யா மானசா.

ராஜா ராணி என்ற தொடர் மூலம் புதியவராக அறிமுகமான இவர் இப்போது முன்னணி நாயகிக்கு இணையாக வளர்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

சஞ்சீவை திருமணம் செய்துகொண்ட ஆல்யாவிற்கு ஐலா என்ற மகள் உள்ளார். அத்தோடு கடந்த மாதம் தான் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என பெயரிட்டுள்ளனர்.

மேலும் குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை தொடரில் நடித்து வந்த ஆல்யா பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 தொடரில் சந்தியாவாக வலம் வருவார் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் இனி சந்தியாவாக நடிக்க போவதில்லை என தெரிவித்த விடயம் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காகவே இருந்தது.

நடிகை ஆல்யா தற்போது தனது இரண்டாவது மகனை பார்த்துக் கொள்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவரது மகனின் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகின.

எனினும் தற்போது நடிகை ஆல்யா மானசா நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் அடுத்து எப்போது சீரியலில் நடிக்க வருவீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் இன்னும் சில மாதங்களில் சீரியலில் நடிக்க வருவேன் என்று தெரிவித்துள்ளார்.இதைக் கேட்ட ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள்.

Advertisement

Advertisement