• May 08 2024

லியோ குறித்து ஆவேசமாக பேசிய பிச்சைக்காரர்... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

லியோ திரைப்படம் வெளியாக முன் தியேட்டர்கள் தோறும் பேனர்கள் வைப்பது வழக்கம் அந்த வகையில் அவ்வாறு  லியோ பேனர் வைக்கப்பட்டு இருந்த ஒரு தியேட்டர் முன் இருந்து ஒரு பிச்சைகாரர் ஆவேசமாக லியோ குறித்து பேசிய  வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


உளுந்தூர்பேட்டையில் உள்ள திரையரங்கு முன் அமர்ந்த படி ஒரு பிச்சைக்காரர் நடிகர் ரஜிகாந்தே வந்தார் அரசியலுக்கு, பெரும் பெயர் பெற்ற ரஜனியே அரசியலில் ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்போது நடிகர் விஜய் வருகிறாரா அரசியலுக்கு. இவருக்கே இவ்வளோ பெரிய பேனர் வைக்கிறாங்களா. ரஜனி ஜெயிலருகே  70 தான் லியோக்கு 150 தான் நான் படம் பார்க்க 70 ரூபா எடுத்து கொண்டு வந்தேன் இங்க பாருங்க என்று சொல்லிய பிச்சைக்காரர் பிச்சை எடுக்கும் தட்டை தூங்கி எரிந்து கோபத்தில் தகாத வார்த்தைகளில் பேசி இருக்கிறார். 


ரஜனியும் வந்தார் அரசியலுக்கு அது பெரிதல்ல யாரும் வரலாம் இவ்வளோ பெரிய பேனர் வைக்குறாங்க. யாரு சோறு போடுவார்கள் இவர்களுக்கு , நானும் ஒரு பிள்ளை பெற்றவன் இன்று பிச்சை எடுக்கிறேன். எல்லோரும் அடுத்தவன் வயிறில் அடிக்காதிங்க எல்லாரும் நல்லா இருக்கணும் என்று மிகவும் ஆவேசமாக கத்தினார்.  பெரிய பேனர் வைப்பவர்கள் தனக்கும் கொஞ்சம் தானம் செய்து இருக்கலாம் என்பதே அவரின் கோவத்தின் வெளிப்பாடாக இருந்தது.    

Advertisement

Advertisement

Advertisement