• May 18 2024

மறைந்த நடிகை சித்ரா வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம் ஹேம்நாத்தின் கோரிக்கையை ரத்து செய்த நீதிமன்றம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து வரும் நிலமை அதிகரித்து வருகின்றது. இவர்கள் எதற்காக இப்படி செய்கின்றார்கள்? அவர்களுடைய மரணத்திற்கு காரணம் என இன்று வரை போலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சரியான காரணத்தை கண்டு பிடிக்கவில்லை.

இந்த வரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முதல் பிரபல ஹொட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டவர் தான் சித்ரா. தனது வருங்கால கணவரான ஹேம்நாத்துடன் ஒன்றாக தங்கியிருந்த நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அனைத்து ரசிகர்களையும் அதிர்சிக்குள்ளாக்கியது.

அத்தோடு இவரது கணவரான ஹேம்நாத்தை கைது செய்த போலீஸார் அண்மையில் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். இவர் விடுதலை ஆனதை அடுத்து நடிகை ரேகா இவரது நண்பர் ஆகியோர் ஹேம்நாத் மீது பல புகார்களையும் குற்றங்களையும் அளித்து வருகின்றனர்.இருப்பினும் இன்னும் சித்ரா மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டடைய முடியவில்லை எனலாம்.

இந்த நிலையில் ஹேம்நாத் தன்னுடைய குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறு நீதி மன்றத்திடம் கோரி இருந்தார்.இருப்பினும் இவருடைய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என ஹேம்நாத்தின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement