• Oct 08 2024

தசைக்கு வெளியே எலும்புகளுடன்... உடல்நிலை மோசமான நிலையில்.. அனாதையாக கிடக்கும் 'விடுதலை' படப் பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. குறிப்பாக இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின்  முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. 

இருப்பினும் விடுதலை படத்தின் ஹைலைட்டாக இருந்தது அதில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் தான். அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மிகவும் அற்புதமாக கோரியோகிராப் செய்து இருந்தார் ஸ்டண்ட் கோரியோகிராபர் பீட்டர் ஹெய்ன். அந்தவகையில் விடுதலை படத்திற்கு இவரின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. 


அதாவது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த சண்டை காட்சிகளுக்கான படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்றது. மிகவும் குறுகலான பாதைகளில் குடியிருப்புகள் நடுவே படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ரொம்பவும் மெய்சிலிர்க்க வைத்து. 

இந்நிலையில் விடுதலை படத்தின் அனுபவம் குறித்தும், தனது திரைப்பயணம் பற்றியும் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் பல விடயங்களை மனம் திறந்து பேசியிருந்தார் ஸ்டாண்ட் கோரியோகிராபர் பீட்டர் ஹெய்ன். அதாவது அவர் பேசுகையில் "இதுவரையில் நான் ஸ்டண்ட் இயக்குநராக பணிபுரிந்த அனைத்து படத்திலேயும் எனது பெஸ்ட்டை மட்டுமே நான் கொடுத்துள்ளேன். 

அந்த வகையில் விடுதலை படத்திலேயும் நான் என்னுடைய பெஸ்ட்டை அதிகமாகவே கொடுத்துள்ளேன். விடுதலை படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு நாள் மட்டுமே உடல்நிலை சரியில்லாமல் ஷூட்டிங் செல்ல முடியாமல் போனது" என்று கூறினார்.


மேலும் அப்பேட்டியில் தனது உடல் நிலை குறித்து பீட்டர் ஹெய்ன் கூறுகையில் "எனது உடல் முழுவதிலும் ஏராளமான ஸ்க்ரூக்கள் உள்ளன. அது நகர்வதை கூட உங்கள் எல்லாராலும் பார்க்க முடியும். பெரும்பாலான எலும்புகள் தசைக்கு வெளியே தான் உள்ளன. அதே போலே எனது ஸ்கல் எலும்புகள் கூட வெளியே தெரியும். என் உடல் நிலை இப்படி மோசமான நிலையில் உள்ளது.

இன்னும் நான் எத்தனை நாட்கள் இப்படி உயிர் வாழ முடியும் என எனக்குத் தெரியவில்லை. அதனால் உயிருடன் இருக்கும் கொஞ்ச காலம் வரை என் மனதுக்கு பிடித்ததை ரசித்து செய்து வாழ ரொம்பவே ஆசை படுகிறேன். மேலும் சினிமாவில் நான் நுழையும் போது என் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தார்கள். சினிமாவிற்காக நான் என்ன எல்லாம் செய்தேன் என்பதை இங்கு சொல்லிக்காட்ட விரும்பவில்லை. 

ஏனென்றால் சினிமா தான் எனக்கு எல்லாமே. உயரமான இடத்தில் இருந்து நான் குதித்துள்ளேன், பல ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்துள்ளேன், முதல்வன் படத்திற்காக ஒட்டு துணி இல்லாமல் உடலில் தீயோடு குதிப்பது போல எல்லாம் நான் நடித்திருந்தேன். இப்படி ரிஸ்க் எடுத்த நான் இன்று அனாதையாக இருக்கிறேன்.  இருப்பினும் ரசிகர்களின் அன்பு எனக்கு ஆனந்தத்தை கொடுக்கிறது" என்றார்.


மேலும் "ஒரு முறை வெளிநாடு செல்வதற்காக ஏர்போர்ட் சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் வந்து என்னை கட்டியணைத்து கொண்டு நலம் விசாரித்தார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. ஒரு பொது இடத்தில் இப்படி செய்கிறாரே என நினைத்தேன். அப்போது அந்த ரசிகர் அவர் கையில் பீட்டர் ஹெய்ன் என என்னுடைய பெயரை டாட்டூ போட்டிருப்பதை காண்பித்ததும் நான் ஷாக்காகிவிட்டேன். இது போல நல்ல மனம் கொண்ட ரசிகர்களை பார்க்கும் போது தான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்" எனவும் தெரிவித்துள்ளார் பீட்டர் ஹெய்ன்

Advertisement