• May 18 2024

ஹீரோவாகும் நாசர் மகன்.. விஜய் சேதுபதி படத்தின் நான்காம் பாகம்.. வைரல் புகைப்படங்கள்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த திரைப்படத்தின் நான்காம் பாகத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் ஹீரோவாக நடித்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகங்கள், மூன்றாம் பாகங்கள், அரண்மனை போன்ற படங்கள் நான்காம் பாகங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படமான ’பீட்சா’ படத்தின் நான்காம் பாகத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்துள்ளது

இந்த படத்தின் முதல் பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய நிலையில் இரண்டாவது பாகத்தை தீபன் சக்கரவர்த்தி, மூன்றாம் பாகத்தை மோகன் கோவிந்த இயக்கினார்கள். இந்த நிலையில் நான்காம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த படத்தில் நாசர் மகன் அபிஹாசன் ஹீரோவாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பூஜையில் அவர் தனது பெற்றோர்களான நாசர், கமீலா நாசருடன் கலந்து கொண்டார்

ஏற்கனவே அபிஹாசன், கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் ‘பீட்சா 4’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

‘பீட்சா 4’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement