• May 19 2024

காவேரியை காதலித்து ஏமாற்றிய நிவின்..? கதறி அழும் காவேரி... பசுபதி சொல்லித்தான் இப்படி எல்லாம் நடந்திச்சா..? அதிரடித் திருப்பங்களுடன் 'மகாநதி'..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் 'மகாநதி'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பத்துடன் அழகாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் காவேரியும் நிவினும் மீட் பண்ணுகின்றனர். காவேரி அழுத வண்ணம் இருக்கின்றார். காவேரியைக் கண்ட நிவின் "என்னாச்சு காவேரி, ஏன் இப்படி இருக்காய்" என காவேரியின் கன்னத்தை கைகளால் அணைத்துக் கேட்கின்றார்.


பதிவிற்கு காவேரி நிவினின் கைகளை உதறித் தள்ளிவிட்டு "விடுங்க நீங்க எல்லாம் வேற, நான் வேற, பசுபதி எங்க அப்பாவை ஏமாத்தினவரு, அவர் குடும்பத்தில் இருந்தவர் தானே நீங்க, எல்லாமே தெரிஞ்சு தானே நான் உங்க கூட பேசினேன் பழகினேன், மொத்தமாக நம்பினேன், இராத்திரி வரைக்கும் எனக்கு உன் மேல நம்பிக்கை இருந்திச்சு" எனக் கூறுகின்றார்.

அதற்கு நிவின் "இப்போ திடீர் என்று என்னாச்சு" எனக் கேட்கின்றார். பதிலுக்கு காவேரி "நிச்சயதார்த்தம் எப்போ, நாளைக்கா, நாளை மறுநாளுக்கா..?, பசுபதி சொன்னாரா என்னை லவ் பண்ணுறேன்னு நம்ப வைச்சு ஏமாற்ற சொன்னாரா..?" எனக் கேட்டு கோபத்தில் கத்துகின்றார்.


அதற்கு நிவின் பதில் எதுவும் சொல்ல முடியாமல் கலங்கி நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement