• Apr 30 2024

என்னடா நடக்குது ‘தக்லைஃப்’ படத்துல? மறுபடியும் வருகிறார்களா துல்கர் சல்மான், ஜெயம் ரவி?

Sivalingam / 2 weeks ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தேர்தல் பணி காரணமாக கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு வராததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ‘தக்லைஃப்’ படத்திற்காக கொடுத்த கால்ஷீட்டை படக்குழுவினர் வீணடித்து விட்டதாக கூறி இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் விலகிக் கொள்வதாக தகவல் வெளியானது. மேலும் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிக்க இருப்பதாகவும் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி, அவர்களது கேரக்டரில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் தமிழகத்தில் தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையுள்ள நிலையில் மீண்டும் கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு திரும்பி விடுவார் என்பதால் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் சமாதானமாகி மீண்டும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே சிம்புவை படக்குழுவினர் கமிட் செய்து விட்டதால் அவருக்கு வேற ஒரு முக்கிய கேரக்டர் கொடுக்க இருப்பதாகவும் எனவே துல்கர் சல்மான், ஜெயம் ரவி நடித்தாலும் சிம்பு இந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன்பின் விலகி, அதன் பின்னர் மீண்டும் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதை பார்க்கும் போது ‘தக்லைஃப்’ படத்தில் என்னடா நடக்குது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement