தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் டாப் நாயகர்களுடன் நடித்து பிரபலமாக வலம் வந்தார்.
இவர் விஜயகாந்த் கார்த்திக் ரஜினி கமல் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் கடந்த 2003ம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினியர் ரகு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இதனை அடுத்து கடந்த 2004ம் ஆண்டு கர்ப்பம் தரித்திருந்த சௌந்தர்யா தனது தம்பியுடன் விமானத்தில் செல்லும் போது இயந்திர கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கு ஒரு சோகம் நடந்தது அனைவருக்குமே கடும் துக்கத்தை கொடுத்தது. இப்போது தனது மனைவியின் இறப்பிற்கு பிறகு ரகு மறுமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.அத்தோடு இவரை பிரபலங்கள் பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.
Listen News!