• Apr 27 2024

பிரபல சினிமா தயாரிப்பாளர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெய்சன் ஜோசப். இவர் குஞ்சாக்கோ போபன் நடித்த 'ஜமுனாபியாரி', 'லவ குசா' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். 44 வயதான இவர் மரணமடைந்திருக்கின்றமை திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.


அதாவது கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இவர் வசித்து வந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அவரது உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஜோசப்பை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இதனால் அவரின் குடும்பத்தினர் குடியிருப்போர் சங்கத்தை தொடர்பு கொண்டு உள்ளனர். குடியிருப்போர் சங்கத்தினர் அவரது வீட்டுக்குச் என்று பார்த்தபோது அங்கே அவர் சடலமாக கிடந்தார். இந்த மரணம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஜோசப் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இவரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement