“நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத்.
தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட் என்று கூற வேண்டும். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார்.
அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.அது மட்டுமல்லாது பட்டிமன்ற பேச்சாளர், பட்டப்படிப்பில் ஆசிரியர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சின்னத்திரை தாண்டி நிமிர்ந்து நில், திருநாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
நல்லதா நாலு விஷயம் என்ற தலைப்பில் இப்போது கோபிநாத் அன்றாடம் வீடியோ ஒன்று வெளியிடுகிறார், அதற்கும் ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து கொண்டு இருக்கும் கோபிநாத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு துர்கா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த அழகிய ஜோடிக்கு வெண்பா என்ற அழகிய மகள் இருக்கிறார்.
இந்நிலையில் அவரின் மனைவியின் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!