• Sep 20 2024

’சூர்யா 44’ படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபலம்.. இயக்குனருடன் முட்டல் மோதலா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பின் போது சூர்யா, பூஜா ஹெக்டே பாடல் காட்சிகள் மற்றும் சில அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’சூர்யா 44’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் ஊட்டி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் அதில் ஒருவர் திடீரென படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ’உறியடி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதன் பின் ’உரியடி 2’ ’பைட் கிளப்’ உள்ளிட்ட படங்களில் நடித்த உறியடி விஜயகுமார் தான் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.



’சூர்யா 44’ படப்பிடிப்பின் போது ’உறியடி’ விஜயகுமாருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து ’உறியடி’ விஜயகுமார் இந்த படத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாக இயக்குனரிடம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ’உறியடி’ விஜயகுமார் காட்சிகள் 8 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய காட்சிகள் வேறு நடிகரை வைத்து மாற்றப்படுமா? அல்லது அவருடைய கேரக்டரே படத்திலிருந்து நீக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சூர்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர் உறியடி விஜயகுமார் என்பதும் ’உரியடி 2’ படத்தை கூட சூர்யா தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தான் ’சூர்யா 44’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க விஜயகுமாருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது அவர் அந்த படத்திலிருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement