• May 10 2024

துணிவு படத்தின் கதை இதுதானாம்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்விஸ்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் கடைசி படமான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள்.எனினும்  அதன் காரணமாகவே வசூல் ரீதியாக இப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.



வலிமை படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் துணிவு படத்திற்கு வந்துவிட கூடாதென்ற முனைப்பில் படக்குழு இருக்கின்றது. இவ்வாறுஇருக்கையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரையில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகிவுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது காசேதான் கடவுளடா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் கதையை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



அத்தோடு இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சாப் கொள்ளையை அடிப்படையாக வைத்து தான் துணிவு திரைப்படம் உருவாகிவருவதாக தகவல் வந்தது. ஆனால் தற்போது இப்படம் பஞ்சாப் கொள்ளையை மையப்படுத்தி உருவாகவில்லை என்ற தகவல் வந்துள்ளது.

மேலும் இப்படத்தின் கதை என்னவென்றால், அஜித் மற்றும் அவரது குழு வங்கியை கொள்ளை அடிக்கிறது. அத்தோடு அவர்கள் எதற்காக வங்கிகளை கொள்ளை அடிக்கிறார்கள் என்ற பின்னணி தான் படத்தின் கதையாம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement