• Apr 27 2024

தளபதி 66 படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த ஜாக்பாட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான இளம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிதம் மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர்.

இவ்வாறு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தளபதியின் 66 வது படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ராஷ்மிகா திரைப்பயணத்தில் விஜய்யுடன் நடிப்பது மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement