• May 10 2024

பொன்னியின் செல்வன் பட ப்ரமோசனுக்காக படக்குழுவினர் இத்தனை இடங்களுக்குச் செல்லவுள்ளனரா?- சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா துபாய் போன்ற இடங்களுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நாவலாசிரியர் கல்கியின் கைவண்ணத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படம் சர்வதேச அளவில் வரும் செப்டம்பர் 30ம் திகதி வெளியாகவுள்ளது.


சோழர்களின் வாழ்க்கையை சிறப்பான வகையில் பதிவு செய்த காவியமாக இருக்கும் இப்படத்தில் கார்த்தி விக்ரம் ஜெயம் ரவி த்ரிஷா ஐஸ்வர்யா ராய் எனப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் என்பன அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இதையொட்டி நடிகர் விக்ரம், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முன்னதாக அறிவித்த நிலையில், அதற்கு கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்களும பதில் கொடுத்தது மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. இந்நிலையில் படக்குழுவினர் விரைவில் தங்களது பிரமோஷன் டூரை துவங்கவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் ஆரம்பமாகும் இந்த பிரமோஷன் டூர், விக்ரம் தனது ட்விட்டரில் குறிப்பிட்ட படி அடுத்ததாக தஞ்சாவூருக்கு செல்கிறது. தொடர்ந்து கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் துபாய் வரை நீளவுள்ளது. இந்த டூரில் யாரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் மற்றும் எப்பொழுது துவங்கவுள்ளது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement