சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை கேப்ரியல்லா செல்லஸ், தற்போது பெண் குழந்தைக்கு தாயாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.
சின்னத்திரை சீரியலில் இரண்டு சீசன்களிலும் நாயகியாக நடித்த இவர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பிரபலமாக காணப்படுகிறார். மேலும் இவர், ஆரா, காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை கேப்ரியல்லா, ஒளிப்பதிவாளர் சுருளியை காதலித்து திருமணம் செய்து, தற்போது சந்தோஷமாக இல்லற வாழ்க்கை நடத்துகிறார். சமீபத்தில் பேட்டியில், தான் விட்ட தவறுகள், வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. பேண்ட் மேல டவுசர் அணிந்து, மாடர்ன் ஸ்டைலில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புதிய ஃபேஷன் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, லைக்குகளை குவித்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!