தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல்களாக சன்டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
எனினும், சமீப காலமாகவே அடுத்தடுத்து ஒரு சில சீரியல்கள் தொடர்ச்சியாக முடிவுக்கு வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
குறிப்பாக விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘கெட்டி மேளம்’ சீரியலும் விரைவில் இறுதி கட்டத்தை எட்டப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் இதுவரை 329 எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ளது. குடும்ப பாசம், திருமண உறவுகள், எதிர்பாராத திருப்பங்கள் என கலந்த கதைக்களத்தால் இந்த தொடர் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த தொடரில் நடிகர் ஸ்ரீ குமார், நடிகைகள் சாயா சிங் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
சமீபத்தில் ஸ்ரீ குமார் கருப்பு வேடத்தில் நடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது. அந்த அளவிற்கு கவனம் பெற்ற சீரியல் தற்போது முடிவுக்கு வரக்கூடும் என்ற தகவல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், சீரியல் உலகில் தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் ரசிகர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
Listen News!