• Apr 17 2026

அரசியல் வாதிகள் ஈனத்தனமானவர்கள்! திரிஷாவிற்காக கொந்தளித்த மன்சூர் அலிகான்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

திரிஷாவைப் பற்றி  பேசி வம்பில் மாட்டிக் கொண்டவர் மன்சூர் அலிகான். இவர் திரிஷாவைப் பற்றி கூறிய கருத்துக்கள்  சமூக  வைவலைத்தலங்களில் இன்னமும் சர்சையானதாகவே இருந்து வரும் நிலையில் அரசியல் பிரமுகராகியு  ஏ.வி ராஜீ அவர்கள் கூறிய சர்ச்சைக் கருத்துக்களுக்கு எதிராக திரிஷாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 


காலையில் இருந்து என்னை நூற்றுக்கனக்கானவர்கள் தொலைபேசில் என்னை தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனது சக நடிகையினை, நாயகியை இவ்வளவு  கீழ்த்தரமாக அரசியல் வாதி என்ற பெயரில் கூறிய ஈனத்தனமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. என் திரைத்துறையில் உள்ள சக நடிகைகளை, சகோதரிகளை , திரைக் குடும்பத்தாரை  யார் குறைசொன்னாலும் அது எங்களையும் சாரும். 


அரசியல் வாதிகளும் திரை உலகினரும் சமத்துவமானவர்கள் இவ்வாறான நிலையில் எமது சக நடிகையை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருப்பது வண்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. அவர் எதற்காக அவ்வாறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை இவ்வாறு கேவலமாக பேசி இருப்பது எனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிக்கின்றது. இது போன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை. அருவருக்கத்தக்கவை உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்மன்சூர் அலிகான்.

Advertisement

Advertisement