• May 17 2025

சர்ச்சையில் சிக்கிய வடிவேல்..! நீதிமன்றம் எடுத்த திடீர் முடிவு!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகில் சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேல் கடந்த சில ஆண்டுகளாக சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். குறிப்பாக, முன்னாள் திரைப்பட நடிகரும் இயக்குருமான சிங்கமுத்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகர் வடிவேலு தன்னிடம் தவறான குற்றச்சாட்டுகளை விதித்து குற்றம் சாட்டியுள்ளதாக சிங்கமுத்து குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  இதற்காக, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் உள்ளார்.


வழக்கின் விசாரணை நடைபெறும் போது இருபுறமும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்தார்கள். வடிவேலுவின் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு நடிகர் வடிவேலுவின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக காணப்படுவதுடன் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் வாதிட்டார்.

நடிகர் வடிவேலு மீண்டும் முழு தீவிரத்துடன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம், அவர் இவ்வழக்கில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆதரவையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement