• May 11 2024

பெரும் பதற்றத்தில் குணசேகரன்... ஜனனியை வீட்டை விட்டுப் போக சொல்லும் ரேணுகா... காணாமல் போன அப்பத்தா எங்கே..? பரபரப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் அப்பத்தாவை பார்ப்பதற்காக வேக வேகமாக சென்ற ஜனனியை குணசேகரன் அப்பத்தாவை பார்க்க அனுமதிக்கவில்லை. பின்னர் ஞானம் ஜனனியைப் பார்த்து "உன் மேல எல்லாரும் வெறியாக இருக்கிறோம். சும்மா இருந்த அப்பத்தாவை பேசிப்பேசி நீ தான் கெடுத்து வைச்சு இருக்க. எந்த உரிமையில நீ இந்த வீட்டுக்குள்ள வர்றா" என்கிறார்.


மேலும் "எங்க தம்பியையே நாங்க ஒதுக்கி வைச்சுட்டோம் அப்படி இருக்கையில் உனக்கு என்ன இந்த வீட்ல வேலை. என்னோட தம்பி பொண்டாட்டி என சொல்லிக்கிட்டு தானே இந்த வீட்டுக்குள்ள வந்த அப்போ அவனுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கும் போது எங்க போனாய்" எனவும் கேட்கின்றார் ஞானம். 

இதனைத் தொடர்ந்து குணசேகரன் "அப்பத்தாவை எல்லாம் பார்க்க முடியாது. கையெழுத்து எல்லாம் வாங்கியாச்சு. இனிமேல் உன்னால எதுவும் செய்ய முடியாது" என்கிறார். பதிலுக்கு ஜனனி "வலுக்கட்டாயப்படுத்தி நீங்க வாங்கின கையெழுத்து செல்லாது. தப்புக்கு மேல தப்பு செய்றீங்க. இது நல்லதுக்கு இல்லை" என கூறுகின்றார்.


இதனையடுத்து இரவு அப்பத்தாவுக்கு கொடுப்பதற்காக சாப்பாடு கொண்டு போன நந்தினியையும், ரேணுகாவையும் திட்டி விரட்டி விடுகிறான் கதிர். பின்னர் "இவர்கள் தான் ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்து இருப்பார்கள்" என ஜனனி  சொல்ல "எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது" என்கிறார் நந்தினி. 

மேலும் "மனைவியின் சடங்குகளை முடித்த பிறகு இதற்கு காரணமானவர்களை பழி வாங்குவேன் என மிகவும் கோபமாக ஜீவானந்தம் சொன்னார். சொத்துக்காக உயிரையே எடுக்கும் அளவுக்கு துணிந்து விட்டார்கள்" எனவும் ஜனனி கூறுகின்றார். அதற்கு ரேணுகா "உனக்கு இந்த பிரச்சினை எல்லாம் வேண்டாம். நீ எங்களுக்காக தானே இந்த வீட்டுக்கு வந்த. எங்களுக்கு எல்லாம் ஒரு வழியை காட்டிட போதும் நீ உன்னோட வாழ்க்கையை பாரு. இந்த சொத்தும் வேண்டாம் எதுவும் வேண்டாம். நாளைக்கு உன்னையும் கொல்ல தயங்க மாட்டார்கள். பிறகு உன்னுடைய பெற்றோர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம். வேண்டாம் மா" என கவலையும் கூறுகின்றார். 

பதிலுக்கு ஜனனி "முடியாது. அப்பத்தாவின் இழப்புக்கும், ஜீவானந்தத்தின் இழப்புக்கும் ஒரு முடிவு தெரியாமல் நான் விடமாட்டேன். இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் இப்போது கிடையாது" என கூறுகின்றார். பின்னர் அடுத்த நாள் காலை குணசேகரன் அப்பத்தாவின் ரூமுக்கு சென்று பார்க்கையில் அங்கு அப்பத்தாவை காணவில்லை. பதறி போய் குணசேகரனும் ஞானமும் வீடு முழுக்க தேட அப்பத்தாவை தேடுகின்றனர். ஆனால் எங்கேயும் அவரைக் காணவில்லை. 

மேலும் கதிர் எங்கோ வெளியில் சென்று இருப்பதாக ஞானம் குணசேகரனிடம் கூறுகிறான். ஞானத்தை ஜனனி வீட்டுக்கு சென்று பார்க்க சொல்கிறார் குணசேகரன். ஆனால் அங்கும் அப்பத்தாவை காணவில்லை. இதனையடுத்து வீட்டில் உள்ள பெண்களிடம் அப்பத்தாவை பார்த்தீங்களா என கேட்கிறார் குணசேகரன். 


பதிலுக்கு ரேணுகா "உங்க தம்பியை கூட தான் காணும். அந்த பக்கம் சம்பவம் பண்ண அனுப்பிவிட்டு திசை திருப்ப பாக்குறீங்களோ. உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க" என கூறுகின்றார். அத்தோடு ஜனனி "யாரும் அப்பத்தாவை பார்க்க கூடாது பேசக்கூடாது என சொல்லிட்டு நீங்க தான் ரூமுக்குள் வைத்து பூட்டி வச்சீங்க இப்போ காணும்னா, என்ன பண்ணீங்க அப்பத்தாவ" என கேட்கிறார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement