• May 11 2024

25 வருடமாக சிக்கலில் சிக்கித் தவிக்கும் நகைச்சுவை நடிகர்-சந்தானம், வடிவேலு தேவைக்கு மட்டும் தான்...மனம் நொந்த லொள்ளு சபா மனோகர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் நடிகர் லொள்ளு சபா மனோகர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தயில் இடம்பிடித்தார்.

இதனால் இவரை அனைவரும் லொள்ளு சபா மனோகர் என்று  எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு அடுக்கடுக்காய் கிடைத்தது. இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் எப்எம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு என்றியானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் குறிப்பாக மலைமலை, மாஞ்சாவேலு, அலெக்ஸ்பாண்டியன், சிகரம்தொடு, என்னமோ ஏதோ, நண்பேண்டா, மனிதன், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.



கடைசியாக இவர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பேய்மாமா என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய நிலை குறித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...

கொரோனா தொற்று  வருவதற்கு முன்பு மாதம் 30 நாளும் நான் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். இந்த மூன்று வருடங்களாக எனக்கு எந்த வேலையும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.



பணம் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன்.  அத்தோடு சந்தானம், வடிவேலு எல்லா நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் எல்லாம் அவர்களுக்கு தேவையான நபர்களை தான் கூடவே வைத்து சம்பளம் போட்டு நடிக்க வைக்கிறார்கள். நம்ப அப்பப்ப அவர்களுக்கு தேவைப்படும் போது கூப்பிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம் சினிமாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

தேவைப்படும்போது நம்மை கூப்பிடுவார்கள். பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடத்தை சம்பாதித்தது நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய பழைய வீட்டை பார்த்து ஷாக்காகி விடாதீர்கள்.மேலும் இது மிகப் பழமையான வீடு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்கு தான். எனக்கு பக்கத்தில் உள்ள எல்லா வீடுகள் பெருசா இருந்தாலும் ஏன் உங்கள் வீட்டை இப்படி வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள்.



அதுவே இடிந்து விழுகிற கண்டிஷனில் தான் இருக்கு. அதனால் எதற்கு ரெடி பண்ணனும் என்று விட்டுட்டேன். மேலும் அதுமட்டுமல்லாமல் இந்த வீடு 25 வருடமாக கேஸில் இருக்கிறது என்று கூறிய மனோகர் இருக்கிற வரைக்கும் இருக்கலாம் அதற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நகைச்சுவையாக பேசினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement