• Sep 08 2024

அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன் இமயமலை செல்கிறார் ரஜனிகாந்த்.

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழுலகத்தில் அறிமுகம் தேவையில்லா ஒரு சிலரில் முதன்மையானவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த்.தற்போது இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர் வெற்றி படங்களை தந்துகொண்டிருக்கும் ரஜனிகாந்தை ஓய்விற்கு அனுமதிக்கிறார்கள் இல்லை அவரது பெரும் ரசிகர் படை.


கடந்த வாரங்களில் சூப்பர் ஸ்டாரின் 170 வது படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் ஓய்விற்காக சூப்பர் ஸ்டார் ஓய்வுக்காக கடந்த வாரமளவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு சென்றிருந்தார்.


இந்நிலையில் சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் திரைப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் தலைவரின் 171 வது படமான கூலி படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் சூப்பர்ஸ்டார்  இமயமலை நோக்கி ஆன்மீகப்பயணம்ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement