• May 10 2024

கண்கலங்கிய ஞானம்... வெறியோடு குணசேகரன் வீட்டிற்கு வந்த ஜான்சிராணி... கோபத்தில் கொந்தளிக்கும் ஜனனி... 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்தவகையில் ஜீவானந்தம், கௌதம் மாற்றும் பார்ஹனா மூவரும் ஒரு இடத்தில் பேசி கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கௌதம் கொடைக்கானலில் போலீசிடம் சிக்கியது குறித்து ஜீவானந்தம் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். 


அப்போது பட்டம்மாளின் 40 % ஷேர் குறித்த போன் கால் வருகிறது. இதனையடுத்து ஷேர் தொடர்பாக கௌதமுக்கு விளக்கம் கொடுத்து அதை முடிப்பதற்கான மொத்த பொறுப்பையும் கௌதமிடன் ஒப்படைக்கிறார் ஜீவானந்தம். இதனைக் கேட்டதும் கௌதம் உடனே அதிர்ச்சி அடைகின்றார். 

மறுபுறம் ரசம் சோறு சாப்பிட்ட குணசேகரன் வீட்டு ஆண்கள் எல்லோரும் கோபத்தில் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். அதேபோல் பெண்கள் அனைவரும் ஐஷுவை அலங்காரம் செய்து அந்த இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். அப்போது நந்தினி ஐஷுவை மீனாட்சி அம்மன் படத்துக்கு விளக்கேற்றி வணங்க சொல்கிறாள்.

இதனைப் பார்த்த குணசேகரன் "என்ன மா தீட்டா இருக்க பொண்ண போய் விளக்கேத்த சொல்ற" என நந்தினியிடம் கேட்கின்றார். அதற்கு நந்தினி "அந்தம்மாவும் பொண்ணு தானே எங்க சாஃப்ட்டா இருக்கனும் யாருகிட்ட முரட்டுத்தனத்தை காமிக்கணும் என அவங்களுக்கு தெரியும்" என நக்கலாக கூறுகிறாள். 

இதனையடுத்து கதிர் கோபத்தில் கொந்தளிக்க குணசேகரன் தடுக்கிறார். "விடுப்பா இந்த ஆட்டம் எல்லா இன்னும் நாலு நாளைக்கு தான். அதுக்கு பிறகு அவர்கள் கொட்டத்தை நான் அடக்குறேன்" என்கிறார் குணசேகரன்.


அந்த சமயத்தில் ரேணுகாவின் அம்மா வந்து ஐஷுவை கொஞ்சுகிறார். ஞானத்திடம் போய் எப்படி மாப்பிள்ளை இந்த பொண்ணை கரையேத்த போறீங்க. முறை செய்ய ஒன்னு விட்ட அண்ணனை வர சொல்லி இருக்கேன் என ரேணுகாவின் அம்மா சொல்ல உடனே கடுப்பில் அம்மாவை திட்டி விடுகிறார் ரேணுகா. 

அதுமட்டுமல்லாது "என் மகளின் விருப்பம் போல தான் நடப்பேன்" என்கிறார் ரேணுகா. உங்க பொண்ணு கிட்ட நல்ல புத்திமதி சொல்லி சடங்கு சுத்த சொல்லுங்க. நாளைக்கு ஞானத்துக்கு ஏதாவது நடந்தா என்ன பண்றது. கடவுள் பக்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை என சொல்லிவிட்டு ஒரு வேலையாக வெளியே செல்கிறார் குணசேகரன். 

பின்னர் ஐஸ்வர்யா ஸ்வாமிக்கு விளக்கேற்றியதும் அனைவரும் அவளை ஆசீர்வாதம் செய்கிறார்கள். மேலும் சக்தி சென்று ஞானத்தை அழைத்து வந்து ஐஷுவை ஆசீர்வாதம் செய்ய சொல்கிறான். ஐஷுவை பார்த்து கண்கலங்கிய  ஞானம் நான் பாத்துக்குறேன் டா. நீ எதையும் நினச்சு குழப்பிக்காத என்கிறார். 

அதற்கு "அண்ணன் இருக்கும் வரைக்கும் எந்த உணர்ச்சியும் இருக்காது. அண்ணன் இல்லனா தான் பெத்த பிள்ளை மேல கூட அப்பாவுக்கு பாசம் வரும்" என சொல்கிறாள் ரேணுகா. அந்த சமயத்தில் ஜான்சி ராணி கடும் கோபத்தில் வந்து இறங்குகிறாள். "ரசம் சோறு போடவா என் பிள்ளையை இங்க கூட்டிட்டு வந்தீங்களா. கூப்பிடுங்கடி அண்ணன" என குணசேகரனை அழைக்கிறாள் ஜான்சி ராணி. 

அதற்கு "இந்த வீட்ல காலையில இருந்து ஏகப்பட்ட பிரச்சனை பேசாம போய்கிட்டே இருக்கு" என ஞானம் சொல்கிறான். நந்தினியிடம் போய் "நீ தானே அடக்க ஒடுக்கமா எங்க வீட்டுக்கு வந்து அனுப்பி வையுங்க நாங்க பத்துக்குறோம்ன்னு சொன்ன. எனக்கு தெரியும்டி நீங்கள் ஏதோ பிளான் போட்டு தான் வந்து கூட்டிட்டு போனீங்கன்னு" கீழ்த்தரமாக ஜான்சி ராணி நந்தினியைப் பேசுகின்றார்.


பதிவிற்கு ஜனனி "இப்படி அநாகரீகமா பேசுறத முதல நிப்பாட்டுங்க. வீட்டை விட்டு வெளியே போங்க" என சொல்ல அவளை பார்த்து முறைக்கிறார் ஜான்சி ராணி. இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement