• May 30 2025

நினைத்ததை சாதித்துக் காட்டிய பாக்கியா.! கோரதாண்டவம் ஆடும் கவுன்சிலர்.! டுடே எபிசொட்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா செல்வியைப் பாத்து கொஞ்சம் வேகமாக வண்டியை ஓட்டு சீக்கிரமாக ஸ்டேஷனுக்குப் போகணும் என்கிறார். அதைக் கேட்ட செல்வி, அக்கா ஒருமாதிரி நீ நினைச்சதை சாதிச்சிட்ட என்று சொல்லுறார். அந்த நேரம் பாத்து கவுன்சிலர் வந்து என்ன பையனை ஸ்டேஷனில இருந்து கூட்டிட்டு வரப்போற சந்தோசத்தில இருக்கிறீங்களா என்று கேட்கிறார். 

இதனை அடுத்து கவுன்சிலர் பாக்கியாவப் பாத்து அமைச்சரிட பொய் சொல்லி எப்புடியோ சம்மதிக்க வச்சிட்ட என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா நான் ஒருவார்த்தை மாறாமல் உண்மையைத் தான் கதைச்சேன் என்று சொல்லுறார். மேலும் கவுன்சிலரைப் பாத்து பண்ணுற தப்பெல்லாம் பண்ணிட்டு எங்ககிட்ட வந்து கத்திக் கொண்டிருக்கீங்க என்கிறார்.


அதைத் தொடர்ந்து கவுன்சிலர் ஒருநாள் கூட உன்னை நிம்மதியா இருக்கவிடமாட்டேன் என்றதுடன் இனித்தான் உண்மையான முகத்தைப் பார்க்கப்போறீங்க என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா செல்வியைப் பாத்து அவர் ஏதும் செய்தால் செய்திட்டு போகட்டும் என்று சொல்லுறார். அதனை அடுத்து பாக்கியா ஸ்டேஷனுக்குப் போய் செழியனை வீட்ட போகச் சொல்லுறார்.

பின் ஈஸ்வரி பாக்கியாவைப் பாத்து செழியன் வந்தது தெரியுமா? என்று கேக்கிறார். அதைக் கேட்ட பாக்கியா நான் தான் செழியனை வெளியில கொண்டுவந்தனான் என்கிறார். மேலும் செழியனை வெளியில கொண்டுவர என்னவெல்லாம் செய்தனான் என்று வீட்ட இருந்த எல்லாருக்கும் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.



Advertisement

Advertisement