• Jun 13 2025

love-னாலே அப்பாக்கு பிடிக்காது.! பிரிஞ்சிடுவோம்னு நினைச்சாரு.! சௌந்தர்யா ஓபன்டாக்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான சௌந்தர்யா மற்றும் அவரது காதலன் விஷ்ணு கலந்து கொண்டனர். அந்த நேர்காணலில் அவர்கள் பகிர்ந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


பிக்பாஸ் வீட்டின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த சௌந்தர்யா, தனது சினிமா பயணத்தின் பின்னணி, ரசிகர்களிடம் கிடைத்த அன்பு மற்றும் தனது முயற்சி குறித்து திறம்பட பகிர்ந்துள்ளார். பேட்டியின் ஆரம்பத்தில், சௌந்தர்யா “தர்பார்” திரைப்படத்தில் நடித்த சிறிய கதாபாத்திரம் குறித்து பேசினார். அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், "ரஜினி சார் மிகவும் நல்லவர். அவரை நேரில் பார்த்ததில் நான் திருப்தி அடைந்தேன். எனக்கு சினிமாவில் பிடித்த ஒரே ஆள் ரஜினி சார் தான்,” என்றார்.

அத்துடன் சௌந்தர்யா தனது சினிமா கனவுகள் குறித்து உண்மையாகவும், திறந்த மனதோடும் பகிர்ந்தார். “நான் சினிமாவுக்கு வரணும் என்று நினைச்சேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எட்டவே இல்லை. 8 வருஷம் கழிச்சு தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைச்சது,” என்றார்.


அதற்கு முன்னால் ஒரு சிறிய கதாபாத்திரமாக நடித்த அனுபவம் இருந்ததாகவும் கூறியிருந்தார். “ஜூனியர் ஆர்டிஸ்ட்டா ஆரம்பிச்சேன்… எத்தனையோ rejection. பின் பிக்பாஸில போய் மக்கள் மனசில் இடம் பிடிச்சேன். இப்போ படம் பண்ணிட்டு இருக்கேன்,” என பெருமிதத்துடன் கூறினார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் அவர் தோன்றியதற்குப் பிறகு ரசிகர்கள் பலரும் “நீங்க ஹீரோயினியா இருக்கணும். கோமாளியா ஏன் வந்தீங்க?” என்று எதிர்வினை தெரிவித்ததாகவும், சௌந்தர்யா கூறினார். “நான் அந்த நிகழ்ச்சிக்கு போனது நம்ம மக்கள் என்னை பார்ப்பதற்காக தான். ஆனா அவர்கள் கோமாளி ரோலுக்கு கொஞ்சம் கொந்தளித்தாங்க." எனவும் தெரிவித்தார்.


அந்த நேர்காணலில் மிகவும் உணர்ச்சிமிகுந்த தருணம் ஏற்பட்டது, சௌந்தர்யா தனது தந்தையைப் பற்றி பேசும்போது,  "எங்கட அப்பா ஒரு ஸ்டேஜுக்கு மேல இவளை எல்லாம் கல்யாணம் பண்ண கேட்கிறதே waste. அவர் நிறைய பேரை பாத்திருக்கிறார் சண்டை போட்டு பிரிஞ்சதை. அப்புடி தான் நானும் பிரிஞ்சிடுவன் என்று பயந்தாரு." என்று தனது காதல் குறித்தும் பேசியிருந்தார்.

Advertisement

Advertisement