• Jun 14 2025

அருணின் ஆட்டத்திற்கு முடிவுகட்டிய வீடியோ.. மகிழ்ச்சியில் குதூகலிக்கும் முத்து..!

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி மனோஜைப் பாத்து தாயத்துக் கட்டுற சாமியாரிட போவமா என்று கேட்கிறார். அதுக்கு மனோஜ் நான் எங்க வேணுமென்றாலும் வாறன் நீ என்கூட சேர்ந்து வாழ்ந்தால் காணும் என்கிறார். அதைக் கேட்ட ரோகிணி ரொம்ப சந்தோசம் மனோஜ் இனிமேல் நான் பாத்துக்கிறேன் என்கிறார். இதனை அடுத்து ஸ்ருதி, ரெஸ்டாரெண்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஜோசிச்சிட்டு இருக்கிறார்.

அதைப் பார்த்த ரவி நீ செய்யுறதைப் பாக்க பொறக்காத குழந்தைக்கு பெயர் வைக்க ஜோசிக்கிறது மாதிரி இருக்கு என்கிறார். பின் ஸ்ருதி ரெஸ்டாரெண்ட் தொடங்கத் தான் போறோம் என்ன பெயர் வைக்கலாம் என்று சொல்லு என்கிறார். அதுக்கு ரவி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டோ செய்யுற என்கிறார். பின் ஸ்ருதி ரெஸ்டாரெண்டுக்கு Happy என்று பெயர் வைக்கலாம் என்று சொல்லுறார்.


இதனை அடுத்து முத்து குடிச்சிட்டு வந்து மீனாவோட கத்திக்கொண்டிருக்கிறார். பின் முத்து அந்த திருடனை பிடிச்சது நான் ஆனா அந்த அருண் என்னோட பெயரைக் கூட அந்த டீவியில சொல்லேல என்கிறார். அதுக்கு மீனா நீங்க பெரிய உதவி செய்த்திருக்கீங்க அப்ப உங்கட பெயரை சொல்லியிருக்கலாம் என்று சொல்லுறார். அதனை அடுத்து முத்து ஏதோ அருணை நல்லவன் என்று சொல்லுவீங்க நல்லவன் இப்படி எல்லாம் பண்ணுவானோ என்று கேட்க்கிறார்.

அதனைத் தொடர்ந்து சீதா மீனாவுக்கு போனே எடுத்து மாமா வந்திட்டாரா? அருணைப் பற்றி பேசினியா என்று கேட்க்கிறார். பின் மீனா அருண் செய்த விஷயத்தை சொல்லுறார். அதைக் கேட்ட சீதா நானும் அவங்களை எப்புடியாவது சமாதானம் செய்திரலாம் என்று பாக்கிறன் ஆனால் நாளுக்கு நாள் பிரச்சனை கூடிக்கொண்டே போகுது என்கிறார். பின் முத்து உயிரைக் காப்பாற்றின அந்த அம்மா வீட்டுக்கு வந்து நன்றி சொல்லுறார். 


பின் அந்த அம்மா எங்களைக் காப்பாற்றினது முத்து தான் என வீடியோ ஒன்றையும் வெளியிடுறார். அதைப் பார்த்த அருண் ரொம்பவே கோபப்படுறார். இதனை அடுத்து பொலீஸ் அதிகாரி அருணுக்கு போன் எடுத்து அந்த அம்மாவை காப்பாற்றினது நீ இல்லையா என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement