இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 242 பயணிகளை ஏற்றிய விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் தரையில் மோதியது.
இந்தப் பயணத்தில் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும், பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தற்பொழுது (த.வெ.க.) கல்வி விருது விழாவில், நடிகர் விஜய் நேரடியாக கலந்துகொண்டு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் 2 நிமிட மெளன அஞ்சலியும் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற த.வெ.க. கல்வி விருது விழா, பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியாகும். இதன் போது விஜய், "இந்த நேரத்தில் ஒரு விழாவை மகிழ்ச்சியாக நடத்துவது எனக்கு கடினமாக இருக்கிறது... காரணம், நேற்று ஒரு பயங்கரமான விபத்து நம் நாட்டில் நடந்துள்ளது" என்றார்.
அவர் தொடர்ந்து, "அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என்பதை, இந்த சம்பவம் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது." எனவும் தெரிவித்திருந்தார். விஜயின் கோரிக்கையின் பெயரில், விழாவில் கலந்து கொண்ட அனைத்துப் பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் 2 நிமிட மெளன அஞ்சலியில் ஈடுபட்டனர்.
Listen News!