• Apr 17 2026

ஷூட்டிங் நேரத்தில் மாரிசெல்வராஜ் பாடிய பாடல்... வைரலாகும் வீடியோ இதோ...

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்ட இவர், தொடர்ந்து  கர்ணன், மாமனிதன் போன்ற இரண்டு மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.


தற்போது இவருடைய இயக்கத்தில் நான்காவதாக ரிலீசாகி உள்ள படம் தான் வாழை. இந்தப் படம் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வாழைத்திரைப்படத்தில் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 


இதில் நிகிலா விமல், கலையரசன் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இதுவரையில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது இந்த திரைப்படம். தற்போது ஷூட்டிங் நேரத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்டி மாறி செல்வராஜ் ஷூட்டிங் நேரத்தில் பாடிய பாடல் வீடியோ ஒன்று வைரலாகிறது. 


Advertisement

Advertisement