• Jun 14 2025

சண்முக பாண்டியனின் கம்பேக் மக்களிடம் எடுபட்டதா.? "படை தலைவன்" திரைவிமர்சனம் இதோ..

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நெஞ்சைக் கவரும் உணர்வுகளை, விலங்குகளின் வித்தியாசமான பின்னணியில் சொல்லும் முயற்சிகள் பல இருந்தாலும், "படை தலைவன்" திரைப்படம் அதில் புதிய முயற்சியாகத் திகழ்கின்றது. இயக்குநர் அன்பு இயக்கத்தில் உருவான இப்படம், இன்று (ஜூன் 13) வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் புரட்சி தலைவன் விஜயகாந்தின் மகனாகத் திரையுலகிற்கு அறிமுகமானவர் சண்முக பாண்டியன். 2015-ம் ஆண்டு வெளிவந்த "சகாப்தம்" படத்தில் அறிமுகமான அவர், அதன்பின் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் நடிப்பிலிருந்து ஓரமாகிக் கொண்டிருந்தார். தற்போது, "படை தலைவன்" திரைப்படம் மூலம் அவர் மீண்டும் திரையுலகில் கம்பேக் கொடுத்துள்ளார்.

"படை தலைவன்" திரைப்படம் யானைகளை மையமாகக் கொண்டு உருவான படமாகும். இது தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவான படம். திரைப்படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை பகிரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக விஜயகாந்த் ரசிகர்கள் படத்துக்காக திரையரங்குகளில் பெரும் கூட்டமாகக் குவிந்துள்ளனர்.


"படை தலைவன்" திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், சமூகக் கருத்தையும், உணர்வுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். மனிதனும், இயற்கையும், விலங்குகளும் இணைந்து வாழும் அழகான உலகத்தை மறைமுகமாக சித்தரிக்கும் இப்படத்தை ஒரு முறை கண்டிப்பாக அனைவரும் திரையில் பார்க்க வேண்டும் என சிலர் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement