• May 10 2024

ஆண்டவன் இருக்கான் குமாரு- நடிகை ஷகீலாவை கைவிட்ட காதலன்- கடைசியில் நடந்த விபரீதம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தவர் தான் ஷகீலா.அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது

ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார்.


 வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த ஷகீலாவின் காதல் கதை குறித்து தெரியவந்திருக்கிறது. ஷகீலா மொத்தம் மூன்று காதல்கள் செய்திருக்கிறாராம். அதாவது 10 வயதில் சுரேஷ் ரெட்டி என்பவரை முதல் காதல் செய்தாராம் ஷகீலா. சுரேஷ் ரெட்டியை காதலித்துக்கொண்டிருக்கும்போதே பள்ளியிலும் ஒருவரை காதலித்தாராம் ஷகீலா.

ஒருநாள் ஷகீலாவுக்காக சுரேஷ் ரெட்டியும், இன்னொருவரும் சாலையில் அடித்துக்கொண்டார்களாம். அப்போது ஷகீலாவின் அண்ணன் இந்த இரண்டு பேரில் நீ யாரை லவ் பண்ற என்று கேட்டாராம். அதற்கு உடனே ஷகீலா, என்ன அண்ணா இப்டி கேக்குறீங்க. வீட்ல சுரேஷ் ரெட்டிய லவ் பண்றேன். ஸ்கூலுல அவன லவ் பண்றேன் என ஒரே போடாக போட்டாராம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணன், இவளுக்கு லவ்னா என்னனே தெரியல போங்கடா பேசாம என அனுப்பிவிட்டாராம்.


அதேபோல் பிரபல நடிகர் ஒருவரையும் காதலித்திருக்கிறார் ஷகீலா. இருவரும் தீவிரமாக காதலித்துவந்த சூழலில் ஏதோ காரணத்தால் அவர்களின் காதலில் பிரேக் அப்பில் முடிந்திருக்கிறது. இன்றுவரை அந்த நடிகருக்கும் திருமணம் ஆகவில்லையாம். அந்த நடிகரின் பெயரை வெளியிட ஷகீலா மறுத்துவிட்டார். இப்படி இரண்டாவது காதலும் தோல்வியில் முடிய மூன்றாவதாக ஒருவரை காதலித்திருக்கிறார்.

மூன்றாவதாக காதலித்தவரும் ஷகீலாவுடன் பிரேக் அப் செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டாராம். அதேசமயம் இன்னமும் ஷகீலாவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார் அவர். சூழல் இப்படி இருக்க ஒரு நாள் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த நபரின் மனைவி, ஃபோன வெச்சிட்டு சாப்டுறீங்களா இல்லையா என அதட்டியிருக்கிறார். அதற்கு அவர் சாப்பிட்டுக்கொண்டுதானே இருக்கேன் சாப்பாட வை என கூறிவிட்டு என்ன குழம்பு கேட்டா தொக்கு செஞ்சிருக்க என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண், எனக்கு வரதைத்தான் செய்ய முடியும் இஷ்டம்னா சாப்டுங்க என கூறியிருக்கிறார். இத்தனையையும் ஷகீலா ஃபோனில் இருந்தபடி கேட்டிருக்கிறார்.


இதற்கிடையே அந்த நபர் காதலித்தபோது ஷகீலாவுடன் தங்கியிருக்கிறார். அந்த சமயத்தில், சட்னியில் ஒரு மிளகாய் அதிகமாக போட்டால் உடனே அதை தூக்கி எறிவாராம். அதையெல்லாம் நினைத்துப் பார்த்த ஷகீலா, என்னிடம் நீ எப்டி நடந்துக்கிட்ட. இப்ப எப்டி மாட்டிருக்க பார்த்தியா. ஆண்டவன் இருக்கான் என எண்ணிக்கொள்வாராம். இதனை ஷகீலா ஒரு பேட்டியில் கூறினார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனது முன்னாள் காதலர் கஷ்டப்படுவதை ஷகீலா எவ்வளவு ரசிக்கிறார் பாருங்க என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement