• May 18 2025

வழமைக்கு மாறாக போட்டோ ஷூட் செய்த உர்ஃபி ஜாவேத்..! குழப்பத்தில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் கவர்ச்சிக்கன்றே பெயர் போனவர் தான் நடிகை  உர்ஃபி ஜாவேத். போட்டோ ஷூட் எடுப்பதற்காகவே விதம்  விதமான ஆடைகளை அணிந்து துணிகளில் மட்டும் இன்றி வித்தியாசமான பொருட்களினால் தன்னை அலங்கரித்து கொண்டு வீதியில் உலா வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அண்மையில் தான் அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு இருக்கணும் என்று தனது மேலாடையில் ஃபேன் ஒன்றை சுழற்ற விட்டிருந்தார். பிறகு சிலிக்கன் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட உடை ஒன்றை அணிந்து வீதியில் உலா வந்தார். 


அவரது ரசனையை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தாறுமாறாக கமெண்ட் அடித்த பொழுதும் அதைப் பற்றிய எதுவுமே சிந்திக்காமல் தனது இஷ்டப்படி ஆடைகளை அணிந்து வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் நின்று கொண்டு வித்தியாசமான உடை ஒன்றை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களை முதலில் பார்க்கும் ரசிகர்கள் குழம்பியே போய் விட்டார்கள்.  இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement