சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், நடிகர் RS கார்த்திக், தனது திரை உலக அனுபவங்களையும் குறிப்பாக TR பாலா என்ற இயக்குநர் குறித்த விமர்சனங்களையும் சிறப்பாகக் கூறியுள்ளார். இந்தப் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாகப் பரவி வருகின்றது.
பேட்டியின் ஒரு கட்டத்தில், நடுவர் ஜின் படத்தின் இயக்குநர் TR பாலா பற்றி சிறிது கூறுங்கள் எனக் கேட்டிருந்தார். அதற்கு RS கார்த்திக், “நான் உண்மை தான் பேசுறேன். TR பாலா மாதிரி பொய் பேசுறவரைப் பற்றி பேசும் போது பெயரை மறைத்துப் பேசாமல் நேரடியாக அவரது பெயரைக் கூறியே பேசலாம்." என்றார்.
கார்த்திக் தொடர்ந்து, TR பாலாவின் முதல் படத்தில் ஹீரோவாக நடித்தது நான் தான் எனக் கூறினார். ஆனால் அந்த அனுபவம் ஒரு பயணமல்ல, ஒரு பாடமானது எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், “ஒரு நாள் TR பாலாவிடம் ஒரு படத்தின் கதை கேட்டேன். அவர் சொன்ன கதை நல்லதாக இருந்தது… ஆனால் actual screenplay-யில் கதை ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. இதைப் போய் அவரிடம் கேட்ட போது, நான் உங்களுக்கு கதை எப்படி சொன்னேனோ, அப்படித் தான் படம் எடுக்கப்போறேன்!” என பதிலளித்ததாகக் கூறினார். அதன் பின் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் படத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இது மட்டுமல்லாமல், " TR பாலா ஒரு விஷயம் தப்பு என்று தெரிஞ்சால் அவர் உடனே அடுத்த பொய்யைத் தேடுவார். இவர் ஹீரோயினி கூட கடலை போடுறவர் என்றதுடன் ஜின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் TR பாலா கதைத்தது கற்பனை எனவும் தெரிவித்தார். அத்துடன் TR பாலாகிட்ட நியாயம் இருந்தால் அந்த நடிகரின் பெயரை நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே...! TR பாலாவின் குடும்பமே ரவுடி, அவன் ஒரு fradu..!" எனவும் தெரிவித்தார்.
Listen News!