தமிழ் திரையுலகில் நட்பு, காதல் என அனைத்தையும் ஒரே நேரத்தில் பகிர்ந்து வரும் பிரபல தம்பதியினர் சூர்யா மற்றும் ஜோதிகா. சினிமா திரையில் காதலித்து பின் திருமண வாழ்க்கையை வாழ்கின்ற இவர்கள், இப்போது தங்கள் குடும்ப நேரத்தை செலவழிக்க ஆப்ரிக்காவின் மயக்கும் அழகு கொண்ட செஷல்ஸ் தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த சுற்றுலா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரைத் துறையினரும் இவர்களின் ரொமான்டிக் தருணங்களை ரசித்து வருகின்றனர்.
செஷல்ஸ் தீவு தனிப்பட்ட அமைதியான சூழலுக்காக உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த இடம் பல உலக பிரபலங்களின் ஹனிமூன் டெஸ்டினேஷனாகவும் கருதப்படுகிறது. சூர்யா - ஜோதிகா தம்பதியர் இந்த இடத்தை தேர்வு செய்திருப்பது, அவர்கள் தனிமையும் அமைதியையும் விரும்பும் பாணியை பிரதிபலிக்கின்றது.
Listen News!