• Oct 06 2025

கதிரின் கனவிற்கு உறுதுணையாக நிற்கும் ராஜி.. திறப்புவிழாவிற்கு வரமறுக்கும் பாண்டியன்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ட்ராவெல்ஸ் நடத்த வாங்கின இடத்தை clean பண்ணிக் கொண்டிருக்கிறார். அங்க ராஜியும் போய் நிற்கிறார். அப்ப ராஜி கதிரைப் பார்த்து என்ன பெயர் வைக்கிறது என்று முடிவு பண்ணிட்டியா என கேட்கிறார். அதுக்கு கதிர் அதெல்லாம் இப்ப சொல்லமாட்டேன் surprise என்கிறார். 


அதனை அடுத்து ராஜியும் தன்னால முடிஞ்ச உதவியை செய்து கொடுக்கிறார். பின் இரவு எல்லாரும் வீட்ட ஒன்னா இருந்து ட்ராவெல்ஸோட இடத்தைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். அப்ப மயில் ட்ராவெல்ஸிற்கு என்ன பெயர் வைச்சனீங்க என்று கேட்கிறார். அதுக்கு அரசி நாங்களும் அதை தான் கேட்கிறோம் ஆனா அண்ணா மூச்சே விடுதில்ல என்று சொல்லுறார். 

மறுநாள் காலையில எல்லாரும் திறப்பு விழாவிற்கு போறதுக்கு ரெடி ஆகுறார்கள். ஆனா பாண்டியன் தான் அங்க வரேல என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி நீங்க கட்டாயம் வரணும் என்கிறார். பின் சரவணன் கதிர் ரொம்ப வருத்தப்படுவான் நீங்க வாங்க அப்பா என்கிறார். 


இதனை அடுத்து அரசி மயில் கிட்ட ட்ராவெல்ஸிற்கு ராஜி பெயர் தான் வைச்சிருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி இத்தன வருசமா பெத்து வளர்த்த என்ர பெயரை வைக்காமல் நேத்து வந்தவ பெயரை வைப்பானோ என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement