இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்திருந்தது .இந்த வெப் சீரிஸ் பெருமளவில் வெற்றி பெறவில்லை என்ற போதிலும் அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது . இந்த நிலையில் சமந்தா போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோஸ் சமூகவலைத்தள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றது .
மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.தமிழ் தெலுங்கு திரைப்படங்களிலும் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
தற்போது போட்டோசூட் ஒன்றை நடத்தி அதனை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .வெள்ளை நிற சுடிதார் அணிந்து தனது செல்ல பிராணியுடன் இருப்பது போன்று போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இப் புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். புகைப்படங்கள் இதோ..
Listen News!