• Apr 17 2026

பசித்தோருக்கு உணவளிப்பதே உண்மையான தொண்டு.! — வைரலான கமல்ஹாசனின் ரம்ஜான் வாழ்த்து

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் புனிதமான ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துச் செய்தியில் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். “பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணை தான் உண்மையான தொண்டு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள், ரம்ஜான் பண்டிகையின் அடிப்படை அர்த்தத்தையும் அதன் ஆன்மீக முக்கியத்துவத்தையும் மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றன.

ரம்ஜான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டும் இல்லாமல், கருணை, பகிர்வு, தியாகம் ஆகியவற்றை உணர்த்தும் காலமாகும். அதேசமயம், ஏழைகளுக்கு உதவி செய்வதும், உணவு வழங்குவதும் இந்த மாதத்தின் முக்கிய அம்சங்களாகும்.

கமல்ஹாசன் தனது வாழ்த்துச் செய்தியில் இதையே வலியுறுத்தியிருப்பது பலராலும் பாராட்டப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அவரது இந்த கருத்து அதிக அளவில் பகிரப்பட்டு, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement