இசை என்பது எல்லைகளைக் கடந்த ஒரு பரவசம். அந்த இசையை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நேரில் கொண்டு சேர்க்கும் நெகிழ்ச்சிகரமான தருணம் இன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பிரபல இசை ரியாலிட்டி நிகழ்ச்சியான சரிகமபவின் புகழ்பெற்ற போட்டியாளர்களான புருஷோத்தமன் மற்றும் அக்ஷயா, இன்று பலாலி விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும், யாழில் நடைபெற உள்ள இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பும், அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்த உணர்வும், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அவர்களது வருகை முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தாலும், விமான நிலையம் வாயிலில் அவர்களை எதிர்பார்த்திருந்த இளைய இசை ரசிகர்கள், நாடகக் குழுக்கள் மற்றும் பாரம்பரிய கலைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய புருஷோத்தமன், "நான் பார்க்கப்போவது என்னுடைய சமுதாய மக்களை. அவர்களை நேரில் சந்திக்கப்போகிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது." என்றார்.
அக்ஷயாவும், "ஸ்ரீலங்கா எனக்கு இரண்டாவது வீடு மாதிரித் தான். இங்கே வரும் போது, எனக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்ற உணர்வு ஒரு விதமான பாசத்தை உருவாக்கிறது. அவர்களுக்காக பாடப்போகிறேன் என்ற எண்ணம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது." எனத் தெரிவித்தார். தற்பொழுது இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!