• May 31 2025

தனிமையில் முடிந்த வாழ்க்கை... ராஜேஷின் பிரிவை தாங்க முடியாத ரசிகர்கள்.! வேதனையின் குமுறல்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சிறப்பாக நடித்து வந்த பன்முக நடிகர் ராஜேஷ் நேற்றைய தினம் காலமானார் என்ற செய்தி, சினிமா உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. 75-வது வயதில் உயிரிழந்த அவரின் மறைவு, அவரது ரசிகர்களிடையே கடும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ராஜேஷின் ரசிகர்கள் சிலர், அவரின் மரணம் குறித்து கூறிய வார்த்தைகள் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தன. “எங்களுக்கு காலையில 7.30 மணிக்குத் தான் தெரியவந்தது. தாங்க முடியாத துயரம். பேசி ஒரு பிரயோசனமும் கிடையாது ஆனா வருத்தம் நிறைய இருக்கு. என்ன நடந்தது என்று தான் தெரியல...”என்று ஒருவர் கூற, அருகில் நிற்கும் மற்ற ரசிகர்களும் கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தனர்.


மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேஷின் மனைவி காலமானார். அவங்க இல்லாம என்னால ஒரு நாள் கூட ஜீவிக்க முடியல." என உணர்ச்சிவசப்பட்டு கூறியிருந்ததாகவும், மனைவியின் மரணத்துக்குப் பிறகு அவரில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

நடிகர் ராஜேஷ் 1980-களில் தொடங்கி 2000-களின் பிற்பகுதிவரை தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தவர். "அச்சமில்லை அச்சமில்லை" , "அந்த 7 நாட்கள்" , "அருவா வேலு" மற்றும் "அலை பாயும் நெஞ்சங்கள்" என ஏராளமான படங்களில் நயமிக்க கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.


ராஜேஷின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் தியாகு கூறியதாவது, “எனது இனிய நண்பர் ராஜேஷ்... மிகச் சிறந்த நடிகராகவும், மனிதராகவும் இருந்தார். அடிக்கடி நாங்க சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். எப்போதுமே அவர் அன்புடன் என்னை உபசரிப்பார்... இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு.” என்றார். இவ்வாறாக பல நடிகர்கள் தங்களது கவலையை தெரிவித்துவருகின்றனர்.

இன்று, அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். காலை முதலே திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்துகொண்டிருக்கிறார்கள்.


Advertisement

Advertisement