சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, எமதர்மராஜா வேஷம் போட்டிருப்பது முத்து தான் என்று தெரிஞ்சோன மனோஜ் அடச்சீ இவன்தானா என்று கேட்கிறார். பின் விஜயா அண்ணாமலையைப் பாத்து என்னங்க இவன் என்ன நினைச்சிட்டு இருக்கிறான் எனக்கு அப்புடியே இதயமே நின்டிருச்சு என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா முத்துவப் பாத்து எதுக்காக இந்த மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு வந்தனீங்க என்று கேட்கிறார்.
அதுக்கு முத்து நான் சவாரிக்கு போன இடத்தில ஷூட்டிங் நடந்து கொண்டிருந்திச்சு அங்க எமன் வேஷம் போட்டு வந்தவருக்கு சரியா டயலொக் பேசவரல அதுதான் நான் அந்த வேஷத்தை போட்டனான் என்று சொல்லுறார். பின் மீனா நீங்க பேசாம சவாரியை விட்டிட்டு நடிக்கப்போங்க என்கிறார். இதனை அடுத்து முத்து அருணை ஏதாவது செய்யணும் என்று தோணுது என்கிறார்.
பின் விஜயா எமன் வந்து தன்ர உயிரை எடுக்கிற மாதிரி கனவு காணுறார். மேலும் விஜயா இறந்த பின் முத்து அண்ணாமலைக்கு வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணப்பாக்கிறார். இதை எல்லாம் கனவில பாத்த விஜயா திடுக்கிட்டு எழும்புறார். இதனை அடுத்து விஜயா அண்ணாமலையைப் பாத்து நீங்க இன்னும் கட்டலயா என்று கேட்கிறார்.
அதுக்கு அண்ணாமலை என்னத்த கட்டுறது கனவு ஏதாவது கண்டியா என்று கேட்கிறார். மறுநாள் ரோகிணி விஜயா சாமியார் விஷயத்தில ரொம்பவே பயந்திட்டார் என்று சொல்லுறார். மேலும் முத்து தனக்கே தெரியாமல் எங்களுக்கு ஒரு நல்லதை செய்திட்டார் என்கிறார். இதனை அடுத்து கனவில அண்ணாமலைக்கு பொம்பிளையா வந்தவர் நிஜத்திலையும் கீரை விக்கிற ஆள் மாதிரி வந்து நிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!