பாலிவுட் திரையுலகில் முன்னணி வகிக்கும் நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். தனது திறமையான நடிப்பு மற்றும் தனித்துவமான விடயங்களினால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாது சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து இன்றுவரை கதாநாயகனாகத் திகழ்கின்றார். மேலும் இவரது பெரும்பாலான திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளன.
150 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் பாலிவுட்டின் முக்கிய பிரபலமாகத் திகழ்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் சம்தீஷுன் என்ற நிகழ்வில் கலந்துகொண்ட ரித்தேஷ் தேஷ்முக்கிடம், ஷாருக்கானின் சிறந்த குணங்களை வெளிப்படுத்துமாறு கேட்கப்பட்டது.
அப்பொழுது அவர் மன்னா திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் தெரிவித்த சுவாரசியமான விடயம் என்னவெனில். நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் அதிகாலை 3:00 மணிக்கே எமது உணவை உண்ணும் பழக்கத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.
மேலும் விருந்தினர்கள் வெளியேறும் போது, ஷாருக்கான் அவர்களின் காரை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வார் என்றும், ஷாருக் தானே வந்து விடைபெற காரின் கதவைத் திறப்பார், இதைப் பார்த்ததும் நான் வியந்து போனேன் என்று ரித்தேஷ் தேஷ்முக் தெரிவித்தார்
Listen News!