• May 11 2024

பிரபல நடிகர் மீது புகார் எழுப்பிய ராஷ்மிகா மந்தனா…நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. மேலும் இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.

அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பான் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூறு வேண்டும்.

இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. மேலும் தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

தற்போது, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில், தளபதி66 திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் இது குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.மூத்த நடிகர் மற்றும் இயக்குநுர் ஆன ராஜ் கபூரின் பேரன் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மூத்த மகன் ரன்பீர் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் நம்பர் 1 நடிகராக வலம் வருபவர்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் மூலம் பிளாக்பஸ்டர் தந்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தற்போது இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூருடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் அனிமல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் தொடங்கியது. அனிமல் படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியிடப்படும். இந்த படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் ரன்பீர் கபூரைப் புகார் செய்துள்ளார் ராஷ்மிகா.மேலும் ரன்பீர் கபூரைப் பற்றி பேசும்போது, ​​​​ரன்பீர் கபூர் மிகவும் அழகாக இருக்கிறார். அவருடன் பணியாற்றுவதற்கு முன்பு மிகுந்த பதற்றத்தில் இருந்தேன். ஆனால் நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது அந்த பதற்றத்திற்கு இடமில்லாமல் போனது. எங்கள் தோற்றப் பரிசோதனையின் போது எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

நான் ஷூட்டிங் பற்றி நினைக்கும் போது, ​​ரன்பீர் மற்றும் சந்தீப் ஆகியோருடன் நான் எவ்வளவு ஈசியாக வேலை செய்தேன். ரன்பீர் கபூர் என்னை மேம் என்று அழைக்கும் ஒரு நபர். எனக்கு அது பிடிக்கவே இல்லை’ என புகழ்ந்து புகார் செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement