• Jul 15 2025

வனிதா – இளையராஜா விவாதம் பெரிதாகும்..! மனம் திறந்த வலை பேச்சு அந்தணன் !

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

திரைப்படம் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக பெண்களுக்கென்ற வகையில், தனியாக படம் தயாரித்து ரிலீஸ் செய்யும் வனிதா விஜயகுமார் இன்று மிகப்பெரிய சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளார். இவரது சமீபத்திய படம் Mr. and Mrs. குறித்து இசைஞானி இளையராஜா மனவருத்தம் தெரிவித்து, சட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளார். காரணம்  அவரது பாடலை உரிமம் இல்லாமல் பயன்படுத்திய  குற்றச்சாட்டு.


வனிதா தரப்பில் கூறப்படுவதாவது, "சோனி" நிறுவனத்திடமிருந்து உரிமம் வாங்கி, முறையாக பணம் செலுத்தி பாடலைப் பயன்படுத்தியதாகும். மேலும் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாகவும் கூறுகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


அந்த சந்திப்புக்குப் பிறகு, இளையராஜா சட்ட வழியில் செல்வது வனிதாவை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. ஏற்கனவே தனியாக நான்கு கோடி செலவில் படம் தயாரித்த வனிதா, இப்போது சட்டவழி, விமர்சனங்கள் என பல பிரச்சனைகளுக்கு இடையில் சிக்கியுள்ளார். “ ஒரு பெண், ஒரு போராளி. தன் உரிமைக்காக  துணிச்சலுடன் பேசுபவர்,” எனும்   தற்போது அந்தணன் கூறிய  வார்த்தைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இளையராஜா தரப்பில், “உரிமம் எங்கிருந்து வாங்கினாலும், அந்த பாடல் எனது பாட்டு என்ற உண்மையை மாற்ற முடியாது. அனுமதி கேட்டால் இலவசமாகவே கொடுத்திருப்பேன்,” என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த அனுமதி கேட்கப்படவில்லை என்று  குற்றச்சாட்டில் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இப்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது, வனிதா தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதா தொடர்ந்து பேட்டிகள் அளித்து இளையராஜா குடும்பம் குறித்த கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இது இசைஞானியின் பெருமைக்கு இழுக்கை  விளைவிக்கும் வகையில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

இது போன்ற விவகாரங்கள், திரைப்பட உலகத்தில் உள்ள உரிமைகள் மற்றும் மனநல தேவைகளை மீளாய்வு செய்யக்கூடிய சந்தர்ப்பமாக மாறிவிட்டது. கலையை மதிக்க வேண்டும், மனிதாபிமானம் முக்கியம் என்பதை இவ்விவகாரம் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறது.


Advertisement

Advertisement