• Apr 16 2026

முதல் உணவு உண்ணும் அன்பு மகள்கள்.... – சினேகனின் நெஞ்சை நெகிழவைக்கும் வீடியோ படுவைரல்.!

shali / 8 months ago

Advertisement

Listen News!

கவிஞர் மற்றும் "பிக்பாஸ்" புகழ் சினேகன், வாழ்க்கையின் இனிமையான அத்தியாயத்தில் புதிய பக்கம் ஒன்றை தற்பொழுது தொடங்கியுள்ளார். நடிகை கனிகாவுடன் வாழ்ந்து வரும் சினேகனுக்கு, சில மாதங்களுக்கு முன்பு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர். இப்போது, அந்த இரண்டு குழந்தைகளுக்கும் முதல் சோறு ஊட்டும் நிகழ்வை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.


அந்த இனிய தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், சினேகன் பகிர்ந்த பதிவு மற்றும் அந்தக் காட்சிகள் அனைவரது இதயத்தையும் நெகிழச் செய்துள்ளன.

குழந்தைகள் பிறந்தது பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறிய சினேகனின் மகள்களுக்கு நடிகர் கமல்ஹாசன்  “காதல்” மற்றும் “கவிதை” என அர்த்தமுள்ள மற்றும் அழகான தமிழ் பெயர்களை வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தமிழ் பாரம்பரியத்தில், ஒரு குழந்தைக்கு முதல் முறையாக சோறு ஊட்டும் நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சினேகனும், கனிகாவும் தங்கள் இரு மகள்களுக்காக இந்த சிறப்பான நிகழ்வை பாசமிகு முறையில் கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வின் வீடியோவை பகிர்ந்த சினேகன் அதன் கீழ், “முதல் உணவு உண்ணும் அன்பு மகள்கள் ” என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். 

Advertisement

Advertisement