• Jun 06 2025

இனியாவை சந்தேகப்படும் நிதீஷ்.! விரிசலாகும் உறவு.. சுதாகரிடம் தஞ்சம் புகுந்த கோபி.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி சுதாகர் வீட்ட வந்து இனியா கிட்ட  பாக்கியாவோட ரெஸ்டாரெண்டை மூடச் சொன்னீங்களாமே என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர் ஓ நான் அவங்க அம்மா கிட்ட பேசச்சொன்னேன் அவள் உங்க கிட்ட சொல்லிட்டாளோ என்கிறார். அதனை அடுத்து கோபி, எதுக்காக பாக்கியா ரெஸ்டாரெண்டை மூடோணும் என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர் சம்மந்தி இப்படி சின்ன ரெஸ்டாரெண்ட் நடத்துறது எனக்கு கெளரவக் குறைச்சலாக இருக்கு என்கிறார்.

இதனை அடுத்து கோபி சுதாகரைப் பாத்து உங்களுக்குத் தெரியாது பாக்கியா ரொம்பவே கஷ்டப்பட்டுத் தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறாள். ஏதோ அவளோட கஷ்டகாலம் இப்ப கொஞ்சம் கஷ்டப்படுறா ஆனா அதில இருந்தும் எப்புடியாவது மேல வந்திருவா என்கிறார் கோபி.  அதனைத் தொடர்ந்து சுதாகர் நான் அவசரமாகப் போய் ஆகணும் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.


பின் இனியா வீட்ட நிற்க bore அடிக்குதென்று ரெஸ்டாரெண்டில போய் நிற்கிறார். அப்ப பாக்கியா ஏன் இங்க எல்லாம் வந்து கஷ்டப்படுற வீட்ட போ என்கிறார். அதைக் கேட்ட இனியா நிதீஷ் பக்கத்தில தான் நிற்கிறார் கொஞ்ச நேரத்தில வந்திருவார் பிறகு போறேன் என்று சொல்லுறார். அந்த நேரம் பாத்து அங்க ஆகாஷ் வந்து நிற்கிறார். அப்ப இனியா ஆகாஷோட கதைக்கிறதப் பாத்த நிதீஷ் ரொம்பவே கோபப்படுறார்.

அதனை அடுத்து நிதீஷ் ஆன்ட்டி ஓட ரெஸ்டாரெண்டில நிறைய ஆட்கள் எல்லாம் வாறாங்க என்று சொல்லுறார். மேலும் நீ ரெஸ்டாரெண்டுக்குப் போறது அம்மாவப் பாக்கத்தானா என்று சந்தேகத்துடன் கேட்கிறார். அதுக்கு இனியா நான் dress change பண்ணிட்டு வாறன் என்கிறார். பின் நிதீஷ் உங்க அம்மா ரெஸ்டாரெண்டில நின்ற பையன் யாரு என்று கேட்கிறார். அதுக்கு இனியா அது செல்வி ஆன்ட்டியோட பையன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement